சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்

22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், மூன்றாவது அணி அமைவது சாத்தியமற்றது என்று கூறினார். 

Exit mobile version