42வது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்  – முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை நந்தனத்தில் 42வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பபாசி நடத்தும் 42வது புத்தக கண்காட்சி இன்று துவங்கி, வரும் 20ம் தேதிவரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்குகளுக்கு சென்ற முதலமைச்சர் புத்தகங்களை பார்வையிட்டார். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியில் மொத்தம் 820க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12 லட்சம் தலைப்புகளில், ஒன்றரை கோடி புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

Exit mobile version