திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் திருத்தளிநாதர் -சிவகாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

இந்தநிலையில், தேரோட்டத்தையொட்டி முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் சோமஸ்கந்தரும் மூன்றாவது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். மூன்று தேர்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் வழியெங்கிலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

கோயில் ஆதீனகர்த்தரான குன்றக்குடி பொன்னம்பல அடிகள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

Exit mobile version