மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெற்றோர்கள், மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version