ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் 

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் குழுமம், நிதி நெருக்கடி காரணமாக விமானிகளுக்கான ஊதியத்தை வழங்குவதிலும் பிற நிலுவை தொகைகளை செலுத்துவதிலும் தாமதித்து வருகிறது.

இதனால் நரேஷ் கோயலிடம் இருக்கும் 51 சதவீத பங்குகளில் 26 சதவீத பங்குகளை டாடா குழுமம் வாங்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version