டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் நன்றி!

கொரோனா தொற்றை கண்டறிய 8 கோடி ரூபாய் மதிப்புள்ள PCR கிட் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. அதற்கு உதவும் வகையில், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்தநிலையில், கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்காக 8 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரத்து 32  PCR கருவிகளை தமிழ்நாடு அரசுக்கு டாடா நிறுவனம் அளித்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த உதவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version