ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை அரசோ, தனியார் நிறுவனமோ எடுத்து நடத்த வேண்டுமென ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி, தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறி விமானங்கள் இயக்கவில்லை. அதனால் நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசோ அல்லது தனியார் தொழில் நிறுவனங்களோ ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்திட முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version