டாஸ்மாக் கடை ஊழியர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அடுத்த பெரும் பட்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் லட்சுமணன் மற்றும், மேற் பார்வையாளர் சண்முகம் ஆகியோர் கடையில் மதுபாட்டில் விற்பனை செய்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றனர். அப்போது, மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்த படி இருவரிடமும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது லட்சுமணன் மறுக்கவே அவரை தாக்கிவிட்டு, சண்முகத்தில் காலில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டதாக தெரிகிறது. துப்பாக்கி சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version