டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடையில் 5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் உரிமையாளர் அந்த வழியாக சென்றபோது, டாஸ்மாக் கடையின் இரும்புக் கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்ததை கண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் வைத்திருந்த 5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version