கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு, 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில், கொரோனா தடுப்பூசி திருவிழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்குமாறு, தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Exit mobile version