சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கான தேர்வு நிறுத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

சமூக நலத்துறையில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் சத்துணவு திட்ட பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மிக அதிகளவில் மனுக்கள் பெறப்படுவதாகவும், இதனால் நேர்காணல் நடைபெறும் போது அதிகளவில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் சூழல் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், இதனை கருத்தில் கொண்டு சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version