தமிழகம் 2021ஆம் ஆண்டிற்குள் குடிசைகளற்ற மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய துணை முதலமைச்சர், அதிமுக இரும்பு கோட்டையாக திகழ்வதாக கூறினார். தமிழகம் 2021ஆம் ஆண்டிற்குள் குடிசைகளற்ற மாநிலமாக மாறும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.