வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில், வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.கொளத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

திமுக வேட்பாளரான ஜீவா வெங்கடேசன் வெற்றி பெற ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு, வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளரிடம் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினரின் இந்த அத்துமீறலை கண்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

புனித தோமையார் மலை ஒன்றியத்துக்குட்டபட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் சின்னத்துடன் கூடிய வேட்பாளர்கள் பட்டியல் இல்லாததால் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர்.

வாக்குசீட்டு இல்லாமல், வாக்குச்சாவடிகளை கண்டவறிவதிலும் சிக்கல் ஏற்பட்டன. மேலும், வாக்கு மையங்கள் சுற்றி மழைநீர் தேங்கிருப்பதால், வாக்காளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Exit mobile version