நாட்டிலேயே தமிழகம் மருத்துவ சேவையில் முதலிடம் வகிக்கிறது

நாட்டிலேயே தமிழகம் மருத்துவ சேவையில் முதலிடம் வகிக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் பூலாம்பட்டி மற்றும் தேவூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கிவைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 12 ஆயிரத்து 701 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Exit mobile version