சுஷ்மா சுவராஜ் ஒரு சிறந்த அரசியல் தலைவர்: ராகுல் காந்தி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சுஷ்மா சுவராஜ் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்றும், நாடாளுமன்றத்திற்கு கிடைத்த ஒரு அபூர்வ மனிதர் எனவும் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version