ராகுல் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக எம்.பி மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Exit mobile version