கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நிரந்தர பணிகளில் பாலின பேதம் பார்க்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தது. கடற்படையில் பெண்களை நிரந்தர கட்டளை பணிகளில் ஈடுபடுத்தலாம் எனவும், ராணுவத்தை போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version