நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைக்கிராமத்தில் மேலூர், கீழூர், கெடமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களிலிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மாலை நேரத்தில் திடீரென்று புதுப்பாளையம் பகுதியிலிருந்து போதமலைக்கு செல்லும் மலைப்பகுதியில் லேசாக தீபற்றியது. பின்னர் சிறிது நேரத்திலேயே இந்த தீ மளமளவென பரவி காடு முழுவதும் தீ பற்றிக்கொண்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த காட்டு தீயால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு எரிந்ததில் போதமலைப்பகுதியிலுள்ள அரியவகை மூலிகை செடிகள், விலையுர்ந்த மரங்கள் மட்டுமன்றி காட்டுவிலங்குகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version