தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்106 வது பிறந்தநாளையொட்டி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது என குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version