அரியலூர் அருகே அரசினர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாக மாணவர்கள் வேதனை!

செந்துறை பகுதியில் அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாணவர்கள் விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் காப்பாளர் மளிகை பொருட்களை வெளிசந்தையில் விற்று விடுவதாகவும், இரவில் மது அருந்தி விட்டு படிக்க விடாமல் செய்வது மட்டுமின்றி, தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். விடுதியில் வழங்கும் உணவு தரமற்ற முறையில் உள்ளதை யாராவது கேள்வி கேட்டால் மிரட்டுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version