மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்

அரியலூரில், எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் விழாவை யொட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்ட நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார். ((அப்போது அம்மாவின் கொள்கைகள், லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம் என்று தெரிவித்தார். )) விடியா ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின், பொம்மை முதல்வராகத்தான் செயல்படுகிறார் என்றும், 20 மாத திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்க வில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி, மக்களுக்கான பொற்கால ஆட்சி என்றும் திமுக ஆட்சி ஸ்டாலின் குடும்பத்திற்கான ஆட்சி என்றும் விமர்சனம் செய்தார்.

Exit mobile version