பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில், பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அங்குள்ள நாக்ஸ்வில்லி நகரில், பள்ளி வளாகத்தின் கழிப்பறையில் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதை அறிந்த ஆசிரியர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை சுற்றிவளைத்து, சரணடையுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், அந்த மாணவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில், மாணவர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த காவல் அதிகாரி கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version