முதல ஸ்கூல் கட்டுங்க..அப்பறம் ஆபீஸ் கட்டுவீங்க!

விருத்தாச்சலம் அடுத்த வண்ணாங்குடி காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடம் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டி தரப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், பள்ளி வளாகத்தில் பள்ளிகட்டிடம் கட்டி தரக்கோரியும், ஊராட்சி மன்ற கட்டிடம் வேண்டாம் என்று கூறியும் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version