கழிவறையை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்!

விடியா திமுக ஆட்சியில், ஜக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி கழிவறைகள் மற்றும் வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் என்பவர் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல், பள்ளியில் ஆய்வு செய்கிறேன் என்கிற பெயரில் சோதனையிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மேலிடத்தில் தகவல் தெரிவிப்பேன் என்று மழுப்பலாக பதில் கூறிவிட்டு சென்றுள்ளார். முதன்மை கல்வி அலுவலரின் இந்த ஆய்வு கண்துடைப்பு நாடகம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Exit mobile version