எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேறி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

மேலும், புயல் அறிவிப்பு காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version