நாமக்கல்லில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் அரசிற்கு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைக்கும் என்றார்.

நாமக்கல்லில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாக அவர் கூறினார். மின் உற்பத்தி திருப்தியாக உள்ளதால், கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version