மூன்றரை ஆண்டுகளில் 7 லட்சம் பேருக்கு மின் இணைப்பு -அமைச்சர் தங்கமணி

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 7 இலட்சம் பேருக்கு, 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப் பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் பயணிகளுக்கு, 3 ஆண்டு சாதனை திட்ட கையேட்டையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, காற்றாலை மூலமாக 8 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும், சூரிய மின்சக்தி மூலமாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது இந்திய அளவிலான உற்பத்தியில் 43 சதவீதம் எனக் கூறினார். வீடுகள்தோறும் சூரிய மின் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் 100 சதவீதத்தை அடையும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

Exit mobile version