திமுக தோல்வி பயத்தில் உள்ளது: அமைச்சர் தங்கமணி

திமுக தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, வெப்படை உள்ளிட்ட 16 ஊராட்சிகளில், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து அமைச்சர் தங்கமணி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அமைச்சருக்கும் வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசின் பல்வேறு வாளர்ச்சித் திட்டங்களால் பொதுமக்கள் பயனைடைந்து வருவதாகக் கூறினார்.

Exit mobile version