மாநில அளவிலான ஆண்கள் சிறப்பு கால்பந்து அகாடமி தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் சிறப்பு கால்பந்து அகாடமி தேர்வு நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்பந்து தேர்வுக்கான பயிற்சி முகாம் நாளை தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தற்போது பயிற்சிக்கான ஐந்து வகையான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி 6,7,8 ஆம் வகுப்பிற்கான தேர்வில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட ஐந்து வகை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Exit mobile version