கேள்விக்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்துகிறார் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர், சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்தியதாக குற்றம்சாட்டினார். குடியுரிமை சட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்யும் திமுகவிற்கு வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Exit mobile version