இலங்கையில் தமிழர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக் கோரியும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி இலங்கை தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் நடைபெற்ற போரில் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், சிலர் காணாமல் போனர்கள். இந்நிலையில் விடுதலை புலிகளுடனான போர் முடிவடைந்ததையடுத்து, இலங்கை மக்கள் தாயகம் திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து போரின்போது காணாமல் போனவர்களை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்களுக்கு சர்வதேச அளவில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அரசுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர்

Exit mobile version