3 விசை படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் 3 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 18 மீனவர்களை, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், 3 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கைதான மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version