இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் காயம்

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ராமேஸ்வரம் மீனவர் காயம் அடைந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

அதோடு, கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் ஜேசு என்பவர் காயம் அடைந்துள்ளார். கரைக்கு திரும்பிய மீனவர்கள், காயமடைந்த மீனவர் ஜேசுவை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Exit mobile version