இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 48படகுகள் விடுவிப்பு

இலங்கை கடற்படையால் 2014 முதல் 2018 ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 48 படகுகளை இந்திய மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. 2014 முதல் 2018ம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 165 படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் இலங்கை நீதிமன்ற உத்தரவுபடி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் தலைமையில் இலங்கைக்கு சென்ற மீனவர்கள், பயன்படும் நிலையில் உள்ள 48 படகுகளையும் கொண்டு வரும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version