கடலில் படகை வழி மறித்து மிரட்டிய இலங்கை கடற்படை

கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள பெருமாள்பேட்டை மற்றும் புதுப்பேட்டை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்ட படகுகளில் கோடியக்கரையின் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை வழிமறித்து மீன் பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர். இதனால், தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

Exit mobile version