துப்பாக்கி சூடு சம்பவம்- இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவிவரும் பரபரப்பான சூழலில், பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளரான அர்ஜுன ரணதுங்க, நேற்று பெட்ரோலியத்துறை அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, அதிபர் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் அவரை தடுக்க முயன்றனர். இதையடுத்து, ரணதுங்கவின் பாதுகாவலர்கள், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும், ரணதுங்கவை கைது செய்யக் கோரி, ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர்.

இந்நிலையில், பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்துக்கு செல்ல முயன்ற அர்ஜுன ரணதுங்கவை போலீஸார் கைது செய்தனர்.

Exit mobile version