சோனிய காந்தி இல்லத்தில் காங். நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டம்

காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் 17-வது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், டெல்லியில் நாளை நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமை வகிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கேற்றனர். இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version