சொத்துப்பிரச்னை – தாயை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்ற குடிகார மகன்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சொத்துப்பிரச்னையால் பெற்ற தாயையே உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த குடிகார மகனை போலீஸார் கைது செய்தனர்.

விராலிபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி பாண்டியம்மாள், தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான இரண்டாவது மகன் பிரகாஷ், 4 லட்சம் ரூபாய் கடனை அடைக்க வீட்டை விற்று பணம் தருமாறு பாண்டியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தாய் என்றும் பாராமல் உருட்டுக்கட்டையால் பாண்டியம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version