சட்டப்பேரவையில் சமூக நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில், இன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். தொடர்ந்து, சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சர்கள் சரோஜா, எஸ். வளர்மதி ஆகியோர் பதிலளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

Exit mobile version