கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முதலமைச்சர் கூறினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவினர் தமிழக அரசின் உத்தரவுகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version