உள்ளாட்சித் துறைக்கு ரூ.2,831 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் துறையில் 2 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 238 ரூபாய் கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் எனவும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 40 குளங்கள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக இணைப்புச் சாலைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும், ஊரக பகுதிகளில் 200 பால் சேகரிக்கும் கூடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மொத்தம் இரண்டாயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version