சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு அவை தொடங்கியவுடன் புதிய உறுப்பினர்கள் மத்தியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒட்டி அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர் உரையின் மீதான விவாதம் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

Exit mobile version