சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த பயணியிடம் சோதனை செய்ததில், 14 தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, குவைத்திலிருந்து சென்னை வந்த பயணியிடம் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 330 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Exit mobile version