மாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

சென்னை பெரம்பூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பூர் சேமாத்தம்மன் காலனியை சேர்ந்தவர் தன்ராஜ். ஆட்டோ ஒட்டுநரான இவர், தமது மாமியார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது,  இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், தன்ராஜயும் அவரின் மனைவி சபரியையும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து வந்த ஓட்டேரி காவல்துறையினர், இருவரையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், தன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த அஜய், விக்கி, வினோத், பிரவீன், சாமுவேல் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் தன்ராஜ் மற்றும் அவரின் மனைவியை 6 பேர் கும்பல் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version