பாபா-தப்பி ஓடவில்லை-ஓய்வெடுத்தார்-தாத்தா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்-புது விளக்கம்

பள்ளி மாணவிகளை தாத்தாவை போல் கட்டிப்பிடித்து சிவசங்கர் பாபா முத்தம் கொடுப்பாரே தவிர, தவறான நோக்கத்துடன் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் புது விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் அனைத்துமே பொய்யானது என சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பள்ளி மாணவிகளை தாத்தாவை போல் கட்டிப்பிடித்து சிவசங்கர் பாபா முத்தம் கொடுத்தாரே தவிர, வேறு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது எனத் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக டேராடூனில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப் பட்டதாகவும், பின்னர் டெல்லியில் ஓய்வு எடுத்ததாகவும் குறிப்பிட்ட அவர்கள், சிவசங்கர் பாபா தப்பி ஓடவில்லை என தெரிவித்தனர். சிவசங்கர் பாபா மீதான அனைத்தும் புகாரும் பொய்யானவை என்றும், பள்ளியை விட்டு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே குடும்பத்தாரின் வறுபுறுத்தலின் பேரில் விலகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Exit mobile version