முன்விரோதத்தால் அதிமுக பிரமுகரின் மனைவி, மகன் கடத்தல் – தனிப்படை போலீசார் விசாரணை !

திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த ரமேஷ், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரோஜா ரமேஷ், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த 24ம்தேதி, கவுன்சிலர் ரோஜா ரமேஷ் மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரையும் மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று, பின்னர் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்றது. கடத்தப்பட்ட ஜேக்கப் அளித்த தகவலின் பேரில், பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் ரமேஷ் குமாரை மிரட்டுவதற்காக கூட்டாளிகளுடன் வந்தபோது அவர் வீட்டில் இல்லாததால், அவரது மனைவி ரோஜா ரமேஷ், மகன் ஜேக்கப்பை கடத்தியதாக சுரேந்தர் தெரிவித்தார். இதையடுத்து, சுரேந்தரின் கூட்டாளிகள் சந்தோஷ், பாஸ்கர், நவீன், சந்திரசேகர் ஆகிய 4 பேரை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version