உள்ளாடையில் கடத்தல்-பசை வடிவில் 3 கோடியே 84 லட்சம்-புலனாய்வு பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 8 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமான புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 6 பயணிகளை சோதனை செய்ததில், ஆடைக்குள் பசை வடிவில் 7 கிலோ 900 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடியே 84 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திட்டக்குடி, வேலூர் மற்றும் பெங்களூர் பயணிகளிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை காட்சிப்பதிவுகளுடன் பார்க்க…

⤵⤵↕↕⬇⬇⏬⏬????

Exit mobile version