மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்!

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் வந்தன. இதனை தொடர்ந்து மலேசியா கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானமும் வந்தது. இந்த 3 விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 3 விமானங்களில் வந்த பயணிகளின் உடமைகளை தீவிரமாக பரிசோதித்தனர். அப்போது மூன்று விமானங்களில் வந்த மூன்று பயணிகள், சுமார் 4 கிலோ எடை கொண்ட தங்க கம்பி மற்றும் கட்டிகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அதனை கடத்தி வந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version