சென்னை விமானநிலையத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் விமானங்கள்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான 3 விமானங்கள் தற்போது செயல்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இடப்பற்றாக்குறை நிலவுவதோடு, பறவைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், செயல்பாட்டில் உள்ள விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை கடிதங்கள் வழங்கியும், விமானங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காததால், இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 3 பழைய விமானங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 10ம் தேதி சம்பந்தப்பட்ட விமான நிறுவன நிர்வாகிகள் சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version