ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் !

விழிதியூர் சாலையில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த விஷ்ணுபிரியன் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவரது நண்பரான ரஜினிசக்தி என்பவருக்கும் கஞ்சா விற்பனையில் தொடர்புள்ளதை கண்டுபிடித்த காவலர்கள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விஷ்ணுபிரியனை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள ரஜினிசக்தியை தேடி வருகின்றனர்.

Exit mobile version